என் மலர்
நீங்கள் தேடியது "சுனில் ஷெட்டி"
- அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார்
- விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரோகித் 121 ரன்களும் விராட் கோலி 74 ரன்களும் அடித்தனர்.
இந்த ஒருநாள் தொடர் தான் ரோகித் - கோலியின் கடைசி தொடராக இருக்கும் என்று அவர்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில், கடைசி போட்டியில் அந்த விமர்சனங்களை இருவரும் அடித்து துக்குநூறாக உடைத்துவிட்டனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகரும் கே.எல்.ராகுலின் மாமனாருமான் சுனில் ஷெட்டி, விராட் கோழி - ரோகித் சர்மாவை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், சாதனைகள், போராட்டங்கள், பெருமை, கண்ணீர், தியாகம் என அனைத்தையும் நாம் எவ்வளவு விரைவாக மறந்துவிடுகிறோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
இரண்டே போட்டிகள் , திடீரென்று எல்லோரும் விமர்சகர்களாகி விடுகிறார்கள்.
அவர்கள் கூச்சலை கேட்டார்கள். சந்தேகங்களைப் படித்தார்கள். ஆனாலும் அவர்கள் அமைதியாக இருந்தார்கள்... ஆனால் அவர்களது பேட்டை பேச வைத்தார்கள்.
ஏனென்றால் ரோஹித் & விராட் போன்ற ஜாம்பவான்கள் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
- ரோகித், கேஎல் ராகுல், சுனில் ஷெட்டி ஆகியோர் ட்ரீம் 11 இன் விளம்பரங்களில் நடித்து உள்ளனர்.
- அந்த விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஐபிஎல் தொடர் 2024 இன்னும் 2 தினங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் வந்து விட்டால் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இந்த முறை ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அவரது மாமனார் சுனில் ஷெட்டி ஆகியோர் ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களில் ஒருவரான ட்ரீம் 11 இன் விளம்பரங்களில் நடித்து உள்ளனர். அந்த விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த விளம்பரத்தில் ரோகித் மற்றும் சுனில் ஒரு மேஜையில் சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். அப்போது அங்கு வந்த கேஎல் ராகுல் மீதமுள்ள ஒரு நாற்காலியில் உட்கார முயல்வார். உடனே ரோகித், இது குடும்ப உணவு சாப்பிடுகிறோம் என கூறுவார். உடனே ராகுல் சோகத்துடன் சுனில் ஷெட்டியை பார்த்து அப்பா என்று கூற உடனே சுனில் ஷெட்டி நோ அப்பா. ஐபிஎல் தொடர் ஆரம்பமாகிவிட்டது. சர்மா தான் என் மகன். சர்மா ஆப்பிள் சாப்பிடு என அன்போடு ஊட்டிவிடுவார் ஷெட்டி. இதை பார்த்த ராகுல் கவலையுடன் அந்த இடத்தில் இருந்து நகர்வார்.
Family time over @klrahul, ab rivalry time shuru ho gaya hai! ?@SunielVShetty ab hue humare ?..#Ad #Dream11 #TeamSeBadaKuchNahi pic.twitter.com/B5lljX3adE
— Rohit Sharma (@ImRo45) March 20, 2024
இந்த விளம்பர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்னும் நிறைய விளம்பரம் இது போன்று நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.






